புதிதாக விவரங்களை இணைத்தல், திருத்தங்களைத் தெரிவித்தல்:

உங்களிடமுள்ள மாவீரர், மாமனிதர் மற்றும் நாட்டுப் பற்றாளர் போன்றோரின் தரவுகள், நிழற்படங்கள், சான்றுகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவேற்றுவதன் ஊடாக, இந்த வரலாற்று ஆவணத்தை மேன்மேலும் வளப்படுத்துவோம்.

பயனர் உருவாக்கம் மற்றும் பயன்பாடு தொடர்பான விளக்கம்

இத்தளத்தில் நீங்கள் ஒரு பயனராகப் பதிவு செய்துகொள்வதன் மூலம், புதிய மாவீரர் விவரங்களைச் சேர்க்க (எமக்கு அனுப்ப) முடியும்.

அத்துடன், பயனராக உள் நுழைந்த ஒருவர், ஏற்கனவே உள்ள விவரங்களில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருப்பின், அவற்றை 'மாற்றக் கோரிக்கை' வழியாக எமக்குத் தெரியப்படுத்தலாம்.

கணக்கை உருவாக்குதல்:
பயனராகப் பதிவு செய்து கொள்வதற்கு, முதன்மைப் பட்டியில் உள்ள 'பதிவு செய்' என்பதைத் தெரிவு செய்து, அங்கு தோன்றும் படிவத்தை நிரப்புதல் வேண்டும். இதன்போது உங்களது பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் மறக்காதிருப்பதற்கு, அவைகளைக் குறித்துக் கொள்ளவும்.

கணக்கு உருவாக்கம் நிறைவடைந்ததும், "உள் நுழை" என்பதைத் தெரிவு செய்து உள் நுழையலாம்.

முக்கிய குறிப்பு: பயனராகப் பதிவு செய்வோரின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

புதிய விவரங்களைச் சேர்த்தல்:
புதிதாக ஒரு மாவீரர் விவரத்தைச் சேர்க்கும் முன்னர், அந்த விவரம் இத்தளத்தில் ஏற்கனவே உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தேடுதல் முறை: இதற்குத் தளத்திலுள்ள " தேடற் பகுதி" யைத் தெரிவு செய்து, குறிப்பிட்ட மாவீரரின் பெயர் அல்லது தேடற் பகுதியில் உள்ள ஏனைய விவரங்களை உள்ளீடு செய்து தேடிப் பார்க்கலாம்.

அவ்வாறு தேடும்போது, குறித்த மாவீரரின் விவரம் ஏற்கனவே தளத்தில் இருந்தால், மீண்டும் புதிதாகச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். எனினும், அம்மாவீரர் தொடர்பான இதுவரை சேர்க்கப்படாத மேலதிக விவரங்கள், புகைப்படங்கள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் உங்களிடம் இருப்பின், குறித்த மாவீரரின் விவரங்களின் மேற் பகுதியில் காண்பிக்கப்படும் "மாற்றக் கோரிக்கை" என்பதைத் தெரிவு செய்து, அதன் வழியாக உள்ளீடு செய்யலாம்.

«வீரவேங்கை மாவீரர்» என்கின்ற அடையாளப்படுத்தல் குறித்த விளக்கம்:

இத்தளத்தில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் «வீரவேங்கை மாவீரர்» என்ற அடையாளத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் (18.05.2009), மாவீரர் விவரங்களை உறுதிப்படுத்திப் படைத்துறைத் தரநிலைகளை (Ranks) அறிவிப்பதற்கான தலைமைப் பீடமோ அல்லது அதிகாரபூர்வ படைத்துறைக் கட்டமைப்போ இல்லாத சூழ்நிலையில், படைத்துறைத் தரநிலைகளை வழங்குவது தேவையற்ற குழப்பங்களுக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம்.

எனவே, இறுதிப் போர்க்கால மாவீரர்களுக்குத் தற்போதைய நிலையில் படைத்துறைத் தரநிலைகளை வழங்குவதில்லை என்றும், அவர்களை «வீரவேங்கை மாவீரர்» என மதிப்பளிப்பது என்றும் முன்னாள் போராளிகளும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இத்தளத்திலும் அவர்கள் "வீரவேங்கை மாவீரர்" என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

வீரவணக்கம்

இன்றைய நாளில் தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்.

முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் - மாவீரர்

அனைத்தும் பார்க்க

பிரிகேடியர் மணிவண்ணன்

அழகரத்தினம் துசியந்தன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

31/12/1970 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" கபிலம்மான் / கபிலன்

இராஜதுரை செல்வராஜா

லிங்கநகர், திருகோணமலை.

11/11/1957 - 18/09/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மேதினி / சரோமினி

செல்வராஜா கலாராணி

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

06/11/1965 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" சாதுரியன்

சிவச‌ங்க‌ர் பார்த்தீபன்

நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.

07/05/1988 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" பொட்டு அம்மான்

சண்முகநாதன் சிவசங்கர்

நாயன்மார்கட்டு, அரியாலை, யாழ்ப்பாணம்.

28/11/1962 - 18/05/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

10/09/1971 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/08/1970 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கொலின்ஸ்

பர்ணாந்து சில்வஸ்டர்

நறுவிலிக்குளம்,மன்னார்.

12/05/1969 - 10/07/1991

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

காவல் துறை மாவீரர்

அனைத்தும் பார்க்க

வீரவேங்கை "மாவீரர்" ஜெனிவாகரன்

யோசெப் அல்பிரட் மெயோ ஜெனிவாகரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

21/07/1983 - 18/01/2009

முல்லை மாவட்டம் மன்னாகண்டல் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

நாட்டுப் பற்றாளர்

அனைத்தும் பார்க்க

அன்னை பூபதி

கணபதிப்பிள்ளை பூபதி

கிரான்,மட்டக்களப்பு.

03/11/1932 - 19/04/1988

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமிர்தகழி மாமாங்கேசுவரர் கோவில் முன்றலில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக 19.03.1988 இலிருந்து 31 நாட்கள் உண்ணாநிலை அறப்போரை நடாத்தி 19.04.1988 அன்று தியாகச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பேராசிரியர் துரைராஜா

அழகையா துரைராஜா

கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்.

10/11/1934 - 11/06/1994

லெப்ரினன்ட் கேணல் அக்பர் / வழுதி

வீரபத்திரன் பேரின்பராசா

கதிரவெளி, மட்டக்களப்பு.

30/03/1973 - 07/10/2006

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படைகளுடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அன்பரசன்

பொன்னையா இராசமுத்து

விசுவமடு, முல்லைத்தீவு

16/10/1950 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அன்பு

நவகோடிலிங்கம் இரட்ணலிங்கம்

மனையாவெளி, திருகோணமலை

24/10/1970 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" குமணன்

பேராசிரியன் நாவேந்தன்

புலோலி, யாழ்ப்பாணம்

11/06/1975 - 17/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" புகழொளி

வேலு கணபதி

முள்ளியவளை, முல்லைத்தீவு.

05/08/1978 - 16/05/2009

முள்ளியவளை, முல்லைத்தீவு

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மூத்த உறுப்பினர்/ அடிக்கற்கள்

அனைத்தும் பார்க்க

லெப்ரினன்ட் பரமதேவா / ராஜா

இராமலிங்கம் பரமதேவா

மட்டக்களப்பு

30/10/1956 - 22/09/1984

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்திருந்த சிறிலங்காக் காவல் நிலையம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் அல்பேட்

கந்தையா ரூபநிதி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

24/06/1961 - 21/12/1985

யாழ்ப்பாணம், சுதுமலையில் அமைந்திருந்த எமது முகாமை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் பண்டிதர் / இளங்கோ

சின்னத்துரை ரவீந்திரன்

கம்பர்மலை, யாழ்ப்பாணம்.

25/12/1959 - 09/01/1985

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகள் முகாம் மீதான சிறிலங்காப் படையினரின் முற்றுகையின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் கணேஸ்

சித்திரவேல் சிற்றம்பலம்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

09/04/1961 - 05/11/1986

திருகோணமலை மூதூர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரஞ்சன் லாலா

கனகநாயகம் ஞானேந்திரமோகன்

ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

02/09/1960 - 13/07/1984

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உந்துருளியில் செல்லும் போது சிறிலங்காப் படையினரால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கரன்

வைத்திலிங்கம் மனோகரன்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

"மாவீரம்" ஆவணக் காப்பகத்தின் நோக்கமும் பணிகளும்

தமிழீழ மக்களினதும் மண்ணினதும் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் தரவுகள், சாதனைகள் மற்றும் தியாகங்களை ஆதாரங்களின் அடிப்படையில் சரியாகவும் நேர்த்தியாகவும் முழுமைப்படுத்தி, ஒரே தளத்தில் பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்துவதே "மாவீரம்" maaveeram.info தகவல் தளத்தின் முதன்மை நோக்கமாகும்.

அனைவரும் எளிதாகப் பார்க்கும் வகையிலும் தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பெற்றுள்ளது.

இது தமிழினத்தின் வரலாற்றுச் சொத்தாகவும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கான வழிகாட்டியாகவும் அமைகிறது.

விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலங்களில் அறிவிக்கப்பெற்ற மாவீரர்களின் விவரங்கள் பல்வேறு வழிகளிலும் சேகரிக்கப்பட்டு இலத்திரனியல் மயமாக்கப்பெறுகின்றன.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை, களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விவரங்களையும் "தமிழீழ மாவீரர் பணிமனை" ஊடாக உறுதிப்படுத்தி இணைத்து வருகிறோம்.

இந்த ஆவணத் தொகுப்பிலுள்ள தகவல்கள் அனைத்தும் விடுதலைப் போராட்டத்தில் பயணித்த தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆவணமாக்கப்படுகின்றன.

இவ்விவரங்களில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இருப்பின், அவற்றை எமக்குத் தெரியப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த ஆவணத் தொகுப்பில் இதுவரை சேர்க்கப்படாத மாவீரர்கள், மாமனிதர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் விவரங்களைச் சேர்க்கும் பணியில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

"நன்றி"
நிர்வாகம்,
"மாவீரம்" ஆவணக் காப்பகம்.