மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 33 விபரங்கள் · பக்கம் 2 / 2

கேணல் கோபித்

வைத்திலிங்கம் சந்திரபாலன்

மல்லாவி, முல்லைத்தீவு.

15/08/1975 - 30/03/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் ரமணன்

கந்தையா உலகநாதன்

திருப்பழுகாமம், மட்டக்களப்பு.

14/10/1965 - 21/05/2006

மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் (சினைப்பர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் இரும்பொறை

ஆசீர்வாதம் ரமேஸ்

மருத்துவமனை வீதி, யாழ் நகர், யாழ்ப்பாணம்

07/04/1973 - 03/09/2000

யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட ரிவிகிரண படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது நாவற்குழிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

16/12/1960 - 29/04/1986

ரெலோ அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகப் பேசுவதற்கு தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டவேளை, யாழ். கல்வியங்காட்டில் அமைந்திருந்த ரெலோ அமைப்பின் தலைமையகத்தில் வைத்து ரெலோ அமைப்பினரால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

10/09/1971 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரெஜி

சுப்பிரமணியம் மகேஸ்வரன்

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்.

10/01/1955 - 02/12/1985

மணலாறு, பட்டிக்குடியிருப்புப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/08/1970 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கொலின்ஸ்

பர்ணாந்து சில்வஸ்டர்

நறுவிலிக்குளம்,மன்னார்.

12/05/1969 - 10/07/1991

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை ஆனந்

இராமநாதன் அருள்நாதன்

மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

25/01/1964 - 15/07/1983

யாழ் மாவட்டம் சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் படுகாயமடைந்த நிலையில், அவரின் வேண்டுகோளின் பேரில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.