மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 26 விபரங்கள்

பிரிகேடியர் சொர்ணம்

ஜோசப்பு அன்ரனிதாஸ்

வாழைத்தோட்டம், அரசடி, திருகோணமலை.

08/04/1964 - 15/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் சங்கர் / முகிலன்

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்

கட்டைத்தோட்டம், வவுனியா

18/09/1949 - 26/09/2001

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" மான்மதி / எழில்மதி

அன்ரனிதாஸ் எழில்மதி

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

லெப்ரினன்ட் சீலன்/ ஆசீர்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி

புனித மரியாள் வீதி, திருகோணமலை

11/12/1960 - 15/07/1983

யாழ். மாவட்டம் சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் படுகாயமடைந்த நிலையில், அவரின் கட்டளையின் பேரில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" சூசை

தில்லையம்பலம் சிவநேசன்

பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

16/10/1963 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கரன்

வைத்திலிங்கம் மனோகரன்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

லெப்ரினன்ட் சங்கர்

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/06/1961 - 27/11/1982

யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் மருத்துவம் பெறும்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பிரிகேடியர் துர்க்கா

பொன்னுத்துரை கலைச்செல்வி

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

24/03/1971 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பொன். சிவகுமாரன்

பொன்னுத்துரை சிவகுமாரன்

உரும்பிராய், யாழ்ப்பாணம்.

26/08/1950 - 05/06/1974

யாழ். மாவட்டத்தின் உரும்பிராய்ப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

வீரவேங்கை "மாவீரர்" சுதாகரி

மனோகரன் சிராணி

இராமநாதபுரம், கிளிநொச்சி.

20/12/1978 - 15/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுடனான சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் அன்பழகன் / விமலன்

கைலாயபிள்ளை ஜெயகாந்தன்

பலாலி, யாழ்ப்பாணம்.

18/08/1972 - 05/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கௌதமன் / ஊரான்

அடைக்கலம் இன்பசோதி

மருத்துவமனை வீதி, யாழ் நகர், யாழ்ப்பாணம்.

01/05/1974 - 19/07/1996

முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கி அழிக்கப்பட்ட, புலிகளின் ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின்போது அளம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்காப் படைகளுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பேராசிரியர் துரைராஜா

அழகையா துரைராஜா

கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்.

10/11/1934 - 11/06/1994

வீரவேங்கை "மாவீரர்" மாதவன் மாஸ்ரர் / மாதவன்

பத்மநாதன் இரகுநாதன்

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

24/07/1958 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் செல்லக்கிளி அம்மான்

சதாசிவம் செல்வநாயகம்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

15/06/1953 - 23/07/1983

யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் சுற்றுக்காவல் ஊர்தி அணி மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அன்னை பூபதி

கணபதிப்பிள்ளை பூபதி

கிரான்,மட்டக்களப்பு.

03/11/1932 - 19/04/1988

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமிர்தகழி மாமாங்கேசுவரர் கோவில் முன்றலில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக 19.03.1988 இலிருந்து 31 நாட்கள் உண்ணாநிலை அறப்போரை நடாத்தி 19.04.1988 அன்று தியாகச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் / தினேஸ்

பரமு தமிழ்ச்செல்வன்

மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

29/08/1967 - 02/11/2007

கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வான்வழித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் கோபித்

வைத்திலிங்கம் சந்திரபாலன்

மல்லாவி, முல்லைத்தீவு.

15/08/1975 - 30/03/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கேணல் ரமணன்

கந்தையா உலகநாதன்

திருப்பழுகாமம், மட்டக்களப்பு.

14/10/1965 - 21/05/2006

மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் (சினைப்பர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் இரும்பொறை

ஆசீர்வாதம் ரமேஸ்

மருத்துவமனை வீதி, யாழ் நகர், யாழ்ப்பாணம்

07/04/1973 - 03/09/2000

யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட ரிவிகிரண படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது நாவற்குழிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

16/12/1960 - 29/04/1986

ரெலோ அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகப் பேசுவதற்கு தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டவேளை, யாழ். கல்வியங்காட்டில் அமைந்திருந்த ரெலோ அமைப்பின் தலைமையகத்தில் வைத்து ரெலோ அமைப்பினரால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

10/09/1971 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரெஜி

சுப்பிரமணியம் மகேஸ்வரன்

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்.

10/01/1955 - 02/12/1985

மணலாறு, பட்டிக்குடியிருப்புப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/08/1970 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.